• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

இலங்கை

இந்த வருடத்திற்கான ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி 2024 ஜனவரி 31 ஆம் திகதி பரீட்சைகள் நிறைவடையும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி முதல் நாளில், கணிதம், உயிரியல், பொருளாதாரம் மற்றும் சமய பாடங்களுக்கான பரீட்சைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்கள் மீண்டும் 2023 உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் மாணவர்களின் கட்டாய வருகை 80 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 

Leave a Reply