• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்து சமுத்திர வலய மாநாடு இன்று - இலங்கையில் எஸ். ஜெய்சங்கர்

இலங்கை

இலங்கையில் இன்று நடைபெறவுள்ள இந்து சமுத்திர வலய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சரை, உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் வரவேற்றனர்.

மீண்டும் இலங்கைக்கு வந்ததில் மகிழ்ச்சசி என்றும் தன்னை வரவேற்ற இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனுக்கு நன்றி என்றும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா-இலங்கை உறவு தொடர்ந்து முன்னேறி வருகிறது என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஜெய்சங்கரின் இந்த விஜயம் இந்த ஆண்டு இலங்கைக்கு அவர் மேற்கொள்ளும் இரண்டாவது விஜயமாகும் அத்தோடு குறித்த மாநாட்டை தவிர, கொழும்பில் இருதரப்பு சந்திப்புகளை ஜெய்சங்கர் நடத்துவார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply