• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகர் ஜக்சனின் பூதவுடலுக்கு பெருமளவான மக்கள் அஞ்சலி

இலங்கை

மறைந்த நடிகர் சகலகலா சக்திய ஜாக்சன் ஆண்டனியின் பூதவுடல் கடவத்த பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நேற்று (10) பொரளையில் உள்ள ஜெயரத்ன respect  home இல் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த கலைஞர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகள், மகாசங்கரத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள், ஜாக்சன் அந்தோணியை விரும்பும் ரசிகர்கள் என ஏராளமானோர் வருகை தந்து அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

பொரளையில் உள்ள மலர் சாலையில் காலை 07.00 மணி தொடக்கம் இரவு 11.00 மணி வரை வைக்கப்பட்டிருந்த பூதவுடல் நேற்று (10) இரவு கடவத்தையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இன்றும் (11) நாளையும் அவரது இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை பிற்பகல் 3 மணியளவில் ராகம புனித பீட்டர் பால் தேவாலயத்தில் இடம்பெறவுள்ளன.
 

Leave a Reply