உடலுறவு குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை இலியானா
சினிமா
நடிகை இலியானா உடலுறவு குறித்து தன்னுடைய பார்வையை சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார். பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை இலியானா ரகசியமான சில விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில் அவரிடம் கோக்கு மாக்கான கேள்விகள் எழுப்பப்பட்டன. முதலில் எப்படியான ஆண்கள் கவர்ச்சியான ஆண்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இசையில் ஆர்வம் உள்ள ஆண்களா..? உடலை திடமாக வைத்திருக்கக் கூடிய ஆண்களா…? சரளமாக பேசக்கூடிய ஆண்களா..? அல்லது நன்றாக பழகக் கூடிய ஆண்களா…? இவர்களில் யார் கவர்ச்சியானவராக உங்களுக்கு தெரிவார். என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த நடிகை இலியானா, ஆண்கள் என்றால் பெண்களிடம் பேச தயக்கப்படக்கூடாது. அவர்களுடைய பேச்சில் கள்ளம் கபடம் இருக்கக் கூடாது. அப்படியான ஆண்களை பேசும்போதே கண்டுபிடித்து விடலாம்.
அப்படியான ஆண்கள்தான் கவர்ச்சியானவர்கள். கூடவே இசையின் மீது ஆர்வம் இருந்தால் இன்னும் சிறப்பான இருக்கும் என்று கூறினார்.
அதனை தொடர்ந்து உடலுறவில் எதை தவிர்க்க கூடாது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய பொழுது, என்னை பொறுத்தவரை உடலுறவு என்பது ஒரு வகையான உடற்பயிற்சி.
அந்த உடற்பயிற்சியை சிறப்பாக செய்ய வேண்டும். உடலுறவு என்பதை தாண்டி இருவருக்குள்ளும் ஒரு உணர்வு இருக்க வேண்டும். அந்த உணர்வு இரண்டாக கலக்கிறது என்ற காதல் ஒருவர் மீது ஒருவருக்கு இருக்க வேண்டும். அப்போது அந்த உடலுறவு சிறப்பானதாக இருக்கும்.
இருவருமே அதனை கொண்டாட வேண்டும். அப்போதுதான் அது ஒரு முழுமையான அனுபவமாக இருக்கும் என வெளிப்படையாக பேசி இருக்கிறார் நடிகை இலியானா. இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.