• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொய்னு புயலால் ஹாங்காங்கில் ஏராளமான விமானங்கள் ரத்து

சீனாவில் உருவான கொய்னு புயல் கடந்த வாரம் தைவானில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அங்கு 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார்.

இந்தநிலையில் தற்போது சீனாவின் தன்னாட்சி பகுதியான ஹாங்காங் அருகே கொய்னு புயல் கரையை கடக்கிறது. அப்போது மணிக்கு 144 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹாங்காங்கில் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் புயலால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களில் மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு தற்காலிக நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

Leave a Reply