• Welcome to TamilsGuide
செய்திகள் 1

8 மாதங்களில் 22 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டிய விமானத்துறை

இலங்கை

நாட்டின் விமானத்துறை கடந்த ஜனவரி மாதம் முதல் ஒகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில், 22 பில்லியன் ரூபாயை இலாபமாக ஈட்டியுள்ளதாகவும், அதில் சுமார் 10 பில்லியன் ரூபா திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சரான நிமல் சிறிபால டி சில்வா, ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள்  வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 200 விமானப் போக்குவரத்து சேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகள் காரணமாக விமான சேவைகள் பல சிரமங்களை எதிர்கொண்டிருந்தன. குறிப்பாக கொரோனாத் தொற்றுநோய் காரணமாக, விமானங்கள் நிறுத்தப்பட்டதுடன், சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைவாகவே காணப்பட்டது.

அதுமட்டுமல்லாது டொலர் நெருக்கடியால் முழு விமானப் போக்குவரத்துத் துறையும் பெரும் நெருக்கடியைச் சந்தித்தது. எவ்வாறாயினும், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நவீன தொழில்நுட்பத்துடன் அபிவிருத்தி செய்ததன் மூலமாக  தென்கிழக்கு ஆசியாவின் சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக இதனை, சர்வதேச விமானப் போக்குவரத்து அதிகாரசபை பெயரிட்டுள்ளது.

பண்டாரநாயக்க விமான நிலையம் கடந்த ஒகஸ்ட் மாதம் 6 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகளுக்கு சேவைகளை வழங்கியுள்ளது. விமான சேவைகளை வழங்குவதன் மூலம் இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் 22 பில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்ட முடிந்துள்ளது” என  அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply