• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வலுக்கும் இஸ்ரேல் பலஸ்தீன் போர்- அன்றே கணித்த பாபா வாங்கா! 

எதிர்காலத்தில் நடப்பதை துல்லியமாக கணிக்கும் பாபா வாங்காவின் கணிப்பு ஒன்று தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இஸ்ரேல் பலஸ்தீன் போர் நடந்துகொண்டிருக்கும் நிலையில் பாபா வாங்காவின் இந்த கணிப்பு முக்கியமானதாகப் பார்க்கப்பட்டு வருகிறது.

இது போன்று பல கணிப்புகள் இருந்தாலும் பாபா வாங்கா கணித்து கூறியவை போல் இது வரை யாரும் துல்லியமாக கணித்து கூறியதில்லை எனலாம்.

உலகின் மிக பெரிய நிகழ்வுகள்

மேலும் தனது சிறு வயதில் கண் பார்வை இழந்த பாபா வாங்கா இதுவரை கணித்த உலகின் மிக பெரிய நிகழ்வுகள் எல்லாம் நடந்தே உள்ளன.

இவர் கணித்த இரட்டை கோபுர தாக்குதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது, செர்னோபில் பேரழிவு மற்றும் இளவரசி டயானா மரணம், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி உள்ளிட்ட விடயங்கள் எல்லாம் நிகழ்ந்தே உள்ளன .

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான இவரது கணிப்புகள் தற்போது பேசு பொருளாகி வருகின்றது.

பாபா வாங்காவின் முதல் கணிப்பு இந்தாண்டு மூன்றாம் உலகப் போர் தொடங்க வாய்ப்புள்ளது. அடுத்து அணு ஆயுதங்களும் கூட பயன்படுத்தப்படும் எனக் கணித்துள்ளார்.

தற்போது இஸ்ரேல்- ஹமாஸ் படைக்கு இடையே போர் ஆரம்பித்துள்ள நிலையில் இந்த முதல் கணிப்பு முக்கியமாக பார்க்கப்படுகின்றது.

ஏனென்றால் இதில் உலக நாடுகள் இரு பிரிவுகளாகப் பிரிந்து போக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இதனால் மூன்றாம் உலக போர் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகின்றது.

உக்ரைன் ரஷ்ய விவகாரத்தை பொறுத்த வரையில் ஒரு சில நாடுகள் மட்டுமே ரஷ்யாவிற்கு ஆதரவாக உள்ளது.

பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதோடு மற்ற நாடுகள் நடுநிலை நிலைப்பாட்டையே கொண்டுள்ளன.

ஆனால் இஸ்ரேல் விடயத்தில் அவ்வாறு இல்லை மேற்குலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கிறது.

மேலும் அமெரிக்க ஆயுதங்களும் இஸ்ரேல் நாட்டிலே உள்ளநிலையில் அடுத்த உலகப்போர் இதுதான் என குறிப்பிடப்படுகிறது.
அரபு நாடுகளும் ரஷ்யாவும் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக உள்ளநிலையில் போர் தொடரும் பட்சத்தில் மற்ற நாடுகளும் உள்ளே வரலாம் என கூறப்படுகிறது.

அதிலும் இஸ்ரேலில் பல ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் வல்லரசு நாடான அமெரிக்கா உள்ளே வரும்.

அமெரிக்கா உள்ள நுழைவது அடுத்த உலக போரிற்கு வழிவகுக்கும் என்பது வல்லுநர்கள் கருத்தாக இருக்கின்றது.

அப்படி போர் நடந்துவிட்டால் அதில் நிச்சயமாக அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும்.

இதனாலேயே பாபா வாங்காவின் கணிப்புகள் உண்மையாகிவிடும் என்று உலக நாடுகள் அஞ்சுகின்றன.    
 

Leave a Reply