• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் கார் கதவைத் திறந்ததால் பறிபோன இளைஞரின் உயிர்

இலங்கை

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் திடீரெனத் திறக்கப்பட்ட கார் கதவில் மோதுண்டு உயிரிழந்த சம்பவம் யாழில் நேற்று(04)  இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம், கோண்டாவில் உப்புமடம் சந்திப் பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும்,  உயிரிழந்தவர்  தாவடியைச் சேர்ந்த லோகராசா தர்சன்  எனவும் தெரிய வந்துள்ளது.

இதேவேளை குறித்த காரின் சாரதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார் எனவும், இது குறித்த மேலதிக விசாரணைகளைப்  பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply