• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு

இலங்கை

தங்காலைக் கடலில் தனது ஆண் நண்பனுடன் கடலில் குளித்த போலந்து நாட்டைச் சேர்ந்த யுவதியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த இரு போலந்து பிரஜைகளும் நேற்று மாலை தங்காலை கடலில் குளிக்க சென்ற வேளை பலத்த கடல் அலைகளால் அவர்கள் இருவரும் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர் எனவும்,  பின்னர் அவர்கள்  இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு தங்காலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படடுள்ளது.

இந்நிலையில், 22 வயதுடைய போலந்து யுவதி  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply