• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெள்ளை வானில் வந்தவர்களால் எனது உயிருக்கு அச்சுறுத்தல்- தேரர் முறைப்பாடு

இலங்கை

வெள்ளை வானில் வந்த சிலரால் தனது உயிருக்கு  அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெவனிபியவர இந்ரா ராம  விகாரையின் விஹாராதிபதியான ‘பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமி‘ நேற்று  மொரவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டில் ” நால்வர் சொகுசு  வெள்ளை வேனில் எனக்கு சொந்தமான இரண்டு விகாரைகளுக்கு என்னைத்  தேடிச் சென்றுள்ளனர்.   அவர்கள்   யாரென  எனக்கு தெரியாது,இதனால்  எனது  உயிருக்கு   அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருகோணமலை இலுப்பை குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பொரலுகந்த ரஜமஹா விகாரையின் நிர்மாண பணிகளை இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிராக   தான் ஆர்ப்பாட்டங்களை முன்னின்று செய்ததாகவும், இதனால் தனது  உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
 

Leave a Reply