• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அசாத் மௌலானா மீது பெண்ணொருவர் குற்றச்சாட்டு! - என்னை திருமணம் செய்து ஏமாற்றினார்

இலங்கை

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரக்காந்தனின் சகாவான ‘அஸாத் மௌலானா‘ தன்னை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார் என பெண்ணொருவர் கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டிற்கமைய நேற்று கல்முனை நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் குறித்த பெண் தெரிவித்துள்ள குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை மேற்கொண்டு மன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டதுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி வரை குறித்த வழக்கு ஒத்திவைத்தார்.

போலியான ஆவணங்களை சமர்ப்பித்து முதல் திருமணத்தை மறைத்து தன்னை மறுமணம் செய்துள்ளதாகவும் பின்னர் தன்னை ஏமாற்றி தலைமைறைவாகி இருப்பதாகவும் குறித்த பெண் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சேனல் 4 ஆவணப்படத்தின் முக்கிய சாட்சியாக ஆசாத் மௌலானா உள்ள நிலையில் அவர் மீது பெண் ஒருவர் இரண்டு வருடத்திற்கு பின்னர் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply