• Welcome to TamilsGuide
செய்திகள் 1

6 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள்

இலங்கை

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள் இன்று 6 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

5 ஆம் நாளான நேற்றைய தினம்  முன்னெடுக்கப்பட்ட  அகழ்வுப் பணியில் மூன்று உடற்பாகங்கள் மீட்கப்பட்டிருந்தன.

குறித்த பகுதியில் சடலங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக நெருக்கமாக குவிந்து கிடப்பதனால் சரியாக எத்தனை உடலங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பான தகவல்களை தெரிவிக்க முடியாது உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகளை நேற்றைய தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், குறித்த அகழ்வுப் பணிகளானது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆறுதலாக இருக்காது எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply