• Welcome to TamilsGuide
செய்திகள் 1

செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் கண்காணிப்பு

இலங்கை

செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் நாட்டின் கடல் எல்லைக்குள் நுழையும் கப்பல்களில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

பிரான்ஸ் அரசாங்கத்திற்கும் இலங்கை கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபைக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வரும் கப்பல்களில் இருந்து எண்ணெய்க் கசிவுகள் கடந்த பருவத்தில் பதிவாகியிருந்தன, இது கடல் வாழ் உயிரினங்களையும் கடல் சுற்றுச்சூழல் அமைப்பையும் கடுமையாகப் பாதித்தது.

இதனையடுத்து, இந்த நிலைமைகளை கண்காணிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு, அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது.
 

Leave a Reply