• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டிற்கு புதிய ஆட்சி தேவை- ரஞ்சித் மத்தும பண்டார  

இலங்கை

கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் புதிய வேலைத்திட்டதினை ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் மாத்தறையிலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார  தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்  இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”இன்று நாட்டின் சகல துறைகளும் சரிந்துபோயுள்ளன. நாட்டு மக்கள் இன்று புதிய ஆட்சியையே எதிர்பார்க்கின்றனர்.நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் சூழ்ச்சியால் ஆட்சிக்கு வந்தமை இன்று சர்வதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

எனவே நாட்டிற்கு புதிய ஆட்சியும் பொறுப்பான நிர்வாகம் தேவை. இந்த ஆட்சியை பொறுப்பேற்க சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது. ஏனைய கட்சிகள் தேர்தல் தொகுதிக் கூட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளது மாத்திரமே.நாம் நாட்டின் சகல தேர்தல் தொகுதிகளிலும் தொகுதிக் கூட்டங்களை நடத்தி முடித்துவிட்டோம்.

கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் புதிய வேலைத்திட்டதினையும் கிராமத்திற்கு கிராமம் செல்லும் புதிய வேலைத்திட்டத்தினையும் ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் மாத்தறையிலிருந்து ஆரம்பிக்கவுள்ளோம்.

அன்றைய தினங்களில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைப்பாளர்களும் மாவட்டத்திற்குச் சென்று புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளல்,வாக்காளர் பிரிவு கிளைகள்,மகளிர் பிரிவுகள்,இளைஞர் பிரவுகள்,பிக்குகள் முன்னணியின் பிரிவுகளை ஸ்தாபிக்கும் நடவடிக்கைகளை அன்றைய தினம் ஆரம்பிக்கவுள்ளோம்.அடுத்த அடுத்த மாதங்களில் இந்த வேலைத்திட்டத்தை சகல மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்துவோம்.

மகளிர் சக்தி,இளைஞர் சக்தி,கிளைச் சங்கம் மட்டுமின்றி,பிக்குகள் ஆலோசனை சபை,சர்வமதத் தலைவர்கள் ஆலோசனை சபை,தொழிற்சங்க இயக்கங்கள்,சார்புடைய அமைப்புகளாலும் கட்சியைப் பலப்படுத்துவோம்.அடுத்த வருடம் தேர்தலுக்கான வருடமாகும்.எந்நேரத்திலும் தேர்தலை சந்திக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.இந்த போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தருமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் ” இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

Leave a Reply