• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சர்வதேச விசாரணைக்குத் தயார் - பொதுஜன பெரமுன

இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணைக்குத் தயார் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேர்தலில் வெற்றி பெறத்தான், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இவ்வாறான சூழ்ச்சியில் ஈடுபட்டதாக ஒருவர் கூறுவாறாயின், எம்மைப் பொறுத்தவரை அவர் புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்றே கருதப்படும்.

ஏனெனில், 2018 இல் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலின்போது நாம் பாரிய வெற்றியடைந்தோம் என்பதை அனைவரும் அறிவார்கள்.

உள்நாட்டில் இதுதொடர்பாக விசாரணை செய்ய தகுதியான நபர்கள் உள்ளார்கள்.

இந்த நிலையில், அரசாங்கமானது சர்வதேச ரீதியாக தான் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நினைத்தால், நாம் அதற்கு இணக்கம்தான் வெளியிடுவோம்.

இது பொதுஜன பெரமுன மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டு என்பதை நாம் நிரூபிப்போம்.

எமது கட்சியின் வளர்ச்சியைக் கண்டு சர்வதேச ரீதியாக சிலர் அஞ்சுவதால்தான் இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply