• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிங்கப்பூரில் இலங்கையர் செய்த மோசமான செயல் - பொலிஸார் தீவிர விசாரணை

இலங்கை

சிங்கப்பூரில் தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயது மதிக்கத்தக்க இலங்கையரான ஈஷான் தாரக என்பவர் தனது மனைவி தியவின்னகே செவ்வந்தி மதுகா குமாரியை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் 9 ஆம் திகதி காலை 10.45 மணி முதல் மாலை 4.42 மணி வரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாக சிங்கப்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

88 ஈஸ்ட் கோஸ்ட் வீதியில் அமைந்துள்ள Holiday Inn Express Katong எனும் ஹோட்டலிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், இந்தக் கொலையுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபர், ஒரு வாரம் பொலிஸ் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் செப்டம்பர் 18 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுவார் என கூறப்பட்டுள்ளது.

குறித்த, ஹோட்டல் அறையில் கைது செய்யப்பட்டவரின் மனைவி, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட வெட்டுக் காயத்துடன் உயிரிழந்த நிலையில் கிடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கூரிய ஆயுதம் ஒன்றும் ஹோட்டல் அறையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக சிங்கப்பூர் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply