• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வடகொரியாவின் அதிநவீன நீர்மூழ்கி கப்பல்

நீருக்கு அடியில் இருந்தபடியே அணு ஆயுத ஏவுகணையை ஏவக்கூடிய அதிநவீன நீர்மூழ்கி கப்பலை வடகொரியா உருவாக்கியுள்ளது. வட கொரியா மற்றும் தென் கொரியா இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வட கொரியா தொடர் ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது.
  
இந்நிலையில் வட கொரியா சமீபத்தில் அணு ஆயுத ஏவுகணை சுமந்து செல்ல கூடிய அதிநவீன நீர்மூழ்கி கப்பலை வடகொரியா உருவாக்கியுள்ளது.

“ஹீரோ கிம் குன் ஆக்” என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கி கப்பல், நீருக்கடியில் இருந்தபடியே அணு ஆயுத ஏவுகணையை ஏவக்கூடிய திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில் எதிரி இலக்குகளை துல்லியமாகத் குறி வைத்து அணு ஆயுத தாக்குதல் நடத்தும் புதிய நீர்மூழ்கிக் கப்பலை வட கொரியா பொறியாளர்கள் வடிவமைத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நீர்மூழ்கி கப்பலை ஜப்பான் மற்றும் கொரிய தீபகற்பத்திற்கு இடையிலான கடல் பிராந்திய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்த வடகொரியா திட்டமிட்டு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. 

Leave a Reply