• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதிக்கு பொப்பி மலர் அணிவிப்பு

இலங்கை

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்று (சனிக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் ஓய்வுபெற்ற போர்வீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேராவினால் பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.

குறித்த பொப்பி மலர் விற்பனையினால் கிடைக்கும் வருமானத்தை கொண்டு ஓய்பெற்றோர் மற்றும் அங்கத்துவம் அடைந்த 50 ஆயிரம் உறுப்பினர்களின் நலன்புரிச் செயற்பாடுகளுக்கு முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை இத்தினமானது 30 வருடகாலம் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திலும் உயிர் நீத்த இராணுவ வீரர்களின் நினைவாக இலங்கை ஓய்வுபெற்ற போர் வீரர்கள் சங்கத்தினால் வருடாந்தம் முன்னேடுக்கப்படுகின்றமை குறிப்பிட்டத்தக்கது.
 

Leave a Reply