• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முடக்கத்திற்கு தயாராகும் யாழ்ப்பாணம்….

இலங்கை

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக் காணியை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கே.சுகாஷ் தெரிவித்துள்ளார்.

இதனைத் தடுத்து நிறுத்தி மண்ணைப் பாதுகாக்க அனைவரும் அணிதிரளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

தையிட்டி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக் காணியை ஆக்கிரமிப்பதற்கு நில அளவைத் திணைக்களமும் அரச அதிகாரிகளும் வருகை தர இருப்பதாக நம்பத் தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அளவீட்டு பணிகள் இடம்பெறுமாக இருந்தால் நிரந்தரமாகவே அந்தக் காணிகள் சுவீகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, சட்டவிரோத விகாரைக் கட்டுமாணத்தை எதிர்த்தும் நில அளவைப் பணிகளை எதிர்த்தும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அனைவரும் தயாராகுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
 

Leave a Reply