• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நெல்லியடியில் வாள்கள் மற்றும் போதைப்பொருளுடன் சிக்கியவர் கைது

இலங்கை

யாழ்ப்பாணம், நெல்லியடி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் நடமாடிய 33 வயதுடைய நபரை நேற்றைய தினம் பொலிஸ் விசேட  அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

அத்துடன் குறித்த நபரிடமிருந்து 3 கிராம் 80 மில்லிக்கிராம் நிறைகொண்ட ஹெரோயின் போதைப்பொருளையும்  3 வாள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேக நபரை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும்  விசேட அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply