• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ்.பல்கலைகழக மாணவன் கத்தியுடன் கைது

இலங்கை

யாழ் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் மாணவனொருவர் கத்தியுடன் நேற்றிரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தக நிலையம் ஒன்றுக்கு கத்தியுடன் சென்று அங்கு பணிபுரிபவர்களை அச்சுறுத்தியமைக்காகவே அம்மாணவன் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த மாணவனை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, பொலிஸார் மேலதிக  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply