• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அங்கபிரதிஷ்டை செய்தவர் செல்வ சந்நிதியில் உயிரிழப்பு

இலங்கை

யாழ்ப்பாணம் – தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் அங்கப் பிரதிஷ்டை செய்த ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னையா சுரேஷ்குமார் என்பவரே 57 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புக்கான காரணம் மரண விசாரணையின் பின்னரே தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
 

Leave a Reply