• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞன் உயிரிழப்பு

இலங்கை

யாழில் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர் ஒருவர் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஆனைக்கோட்டை பகுதியைச்  சேர்ந்த குறித்த  இளைஞன்   அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் வைத்திய பரிசோதனையில் இளைஞன் கிருமித் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை மற்றுமொரு இளைஞனும் போதைப் பொருளுக்கு  அடிமையான நிலையில், உடலில் கிருமி தொற்றுக்கு இலக்காகி  யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply