• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அடுத்த 3 மாதங்களில் இந்தியாவில் இருந்து 92.1 மில்லியன் முட்டைகள் இறக்குமதி

இலங்கை

அடுத்த 3 மாதங்களில் இந்தியாவில் இருந்து 92.1 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி முன்வைத்த தீர்மானதிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையால் பரிந்துரைக்கப்பட்ட 3 இந்திய நிறுவனங்களிடமிருந்து இலங்கை அரசாங்கம் விலைக்கோரல்மனுவை வினவியுள்ளது.

விலை விபரங்களின் அடிப்படையில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை கருத்திற் கொண்டு, அரச வர்த்தக (இதர) கூட்டுத்தாபனத்தின் ஊடாக முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

முட்டையின் விலையை ஸ்திரப்படுத்தும் வகையிலும், உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையிலும் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை முன்னர் அனுமதி வழங்கியிருந்தது.
 

Leave a Reply