• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் யாழ் தமிழர்

சீன இனத்தை சாராத ஒருவரை பிரதமராக தேர்ந்தெடுக்க சிங்கப்பூர் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட சிங்கப்பூர் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிங்கப்பூரில் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் பதவிக்காலம் வரும் செப்டெம்பர் 13ம் திகதியுடன் முடிவடையும் நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என அவர் கடந்த மே 29ம் திகதி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் மக்கள் செயல் கட்சியின் மூத்த அமைச்சரான தர்மன் சண்முகரத்தினம் தனது மனைவி ஜேன் யுமிகோ இடோகி உடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.

இதேவேளை ஆம்முறை ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply