• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வவுனியா இரட்டைக்கொலை சம்பவம்! தொடர்ந்து நீடிக்கும் வன்முறை

இலங்கை

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் சகோதரர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் குறித்த நபர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 23 ஆம் திகதி வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரின் மீதே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் வசித்து வரும் தவசிகுளம் பகுதியில் வைத்து இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் பிரதான சந்தேக நபரின் சகோதரரான 37 வயதுடைய நபர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணை

Leave a Reply