• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விகாரைக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேரர்கள் போராட்டம்

இலங்கை

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த பிக்குகளால் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை, இலுப்பைக்குளம் பகுதியில் விகாரை அமைப்பதற்கு எதிராக தமிழ் மக்களினால் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த கிழக்கு மாகாண ஆளுநர் அப்பகுதியில் அமைக்கப்பட்ட விகாரையின் கட்டுமானங்களை இடைநிறுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கு எதிராகவே இன்று இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

திருகோணமலை, மாவட்ட செயலகத்திற்கு முன்பாக, ஏ-6 பிரதான விதியில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த பௌத்த பிக்குகளும், சிவில் சமூக உறுப்பிர்களும் கிழக்கு ஆளுநருக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறும், பதாதைகளை ஏந்தியவாறும் எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இந்தப் போராட்டம் காரணமாக குறித்த வீதியுடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

காலாகாலமாக தமிழ் மக்கள் வாழும் குறித்த பகுதிக்குள் விகாரை அமைத்தால் அது இன முறுகலை ஏற்படுத்தும் என்று அப்பகுதி வாழ் மக்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply