• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொலிஸாருக்கு எதிராக  வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

இலங்கை

வவுனியாவில் இன்று பொலிஸாருக்கு எதிராக, பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் முன்பாக மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவுக்கு  பௌத்தர்களை யாத்திரைக்கு  அழைத்துச்  செல்வதாகக் கூறி   பணமோசடி செய்த நபரை  மக்கள் பிடித்து கொடுத்தும், வவுனியா பொலிஸார் அவர்களை விடுவித்துள்ளதாகத்  தெரிவித்தே பாதிக்கப்பட்டவர்களால் இவ் ஆர்ப்பாட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கண்டியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு  20 இற்கும் மேற்பட்டவர்களிடம் ஆளுக்கு தலா 1,80,000 ரூபாய் வீதம் பெற்றுக் கொண்டு தலைமறைவாகியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 18 ஆம் திகதி குறித்த நபர் வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களம் முன்பாக நின்றுள்ள நிலையில் அவரால் பாதிக்கப்பட்ட  சிலர் அவரைப் பிடித்து  வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்துள்ளபோதும் அவர் பொலிஸாரினால் விடுவிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொலிஸாரின் இச்செயலைக் கண்டித்தே பாதிக்கப்பட்டவர்களால் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், தம்மை ஏமாற்றிய நபரை பொலிஸார்  உடனடியாகக் கைது செய்து தமது பணத்தையும், கடவுச் சீட்டையும் பெற்றுத் தரவேண்டும். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாம் சிறுகச் சேர்த்த பணத்தை சுற்றுலாவை நம்பி கொடுத்து ஏமாந்துள்ளோம். ஏமாற்றியவரை நாம் பிடித்து கொடுத்தும் பொலிஸார்  அவரை விடுவித்துள்ளனர். எமக்கு தேவை எமது பணமும் கடவுச் சீட்டுமே. அதனை பொலிஸார் பெற்றுத் தர வேண்டும் ” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply