• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உனக்கு எவ்ளோ ரேட் என்று கேட்கிறார்கள் - கிரண் வேதனை

சினிமா

கடந்த 2002 -ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை கிரண். இதையடுத்து இவர் வில்லன், வின்னர், அன்பே சிவம், அரசு, தென்னவன், ஆம்பள உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.
  
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கிரண், "பிகினி உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டால், 'உனக்கு எவ்ளோ ரேட்' என்று கேட்கிறார்கள்".

மேலும் அவர் கூறுகையில், "நான் ஒருவரை காதலித்தேன். அது தான் என் வாழ்க்கை நான் செய்த பெரிய தப்பு. இதுமட்டும் நடக்கலைன்னா நான் திரைத்துறையில் இருந்து இவ்ளோ தூரம் சென்று இருக்கமாட்டேன். சிலர் என்னை சினிமாவில் இருந்து ஒதுக்கி வச்சிட்டாங்க. தற்போது நான் விஜய்யின் லியோ படத்தில் நடித்து வருகிறேன்" என்று கிரண் கூறியுள்ளார். 
 

Leave a Reply