• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தாயை காப்பாற்றி உயிரைவிட்ட மகள்- அமெரிக்காவில் பயங்கரம்

வாஷிங்டன் பல்கலைகழகத்தில் படித்து வந்தவர் 21 வயதான ஏஞ்சலினா டிரான். இவர் தனது தாயுடனும், தாயின் இரண்டாம் கணவர் கியெப் கெய்ன் சவ் ஆகியோருடன் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் பீகான் ஹில் பகுதியில் வசித்து வந்தார். கியெப், கடந்த வருடம் வரை வியட்னாமில் வாழ்ந்து, சென்ற வருடம்தான் அமெரிக்காவிற்கு வந்திருந்தார். இவரது தாய்க்கும், மாற்றாந்தந்தைக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெறுவது வழக்கம். இரண்டாம் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற அவரது தாய் முயற்சித்தார். இதனால் பொருளிழப்பு ஏற்படும் என அஞ்சிய அவரது இரண்டாவது கணவர் சமீபத்தில், ஒரு நாள் இரவு டிரானின் தாயுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்குவாதம் முற்றியதில் கியெப், டிரானின் தாயின் முகத்திலும் தலையிலும் சுமார் 15 முறை கைகளாலேயே குத்தினார். அப்போது தனது படுக்கையறையில் உறங்கி கொண்டிருந்த டிரான், சத்தம் கேட்டு எழுந்து வந்து, உடனடியாக தாயாரை காக்க முயன்றார். தாயார் தாக்கப்படுவதை தடுக்க கியெப்பின் கைகளை டிரான் பிடித்து கொள்ள, உடனே டிரானின் தாயார் அங்கிருந்து தப்பி ஓடினார். இதையடுத்து கியெப்பின் கோபம் டிரான் மீது திரும்பியது. இதனால் கியெப் ஒரு பெரிய கத்தியை எடுத்து டிரான் நெஞ்சில் சரமாரியாக பல முறை குத்தினார். தனது உடை முழுவதும் ரத்த கறை இருந்ததால், இதற்கு பிறகு கியெப் உடைகளை மாற்றி கொண்டார். பிறகு ஒரு கத்தியால் டிரானை மீண்டும் தாக்கினார். டிரான் மீது 107 கத்திக்குத்துகள் விழுந்தன. கத்தி குத்துக்கு ஆளான டிரான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதற்கிடையே டிரானின் தாய், தான் ஒளிந்திருக்கும் இடத்திலிருந்து அமெரிக்காவின் அவசர உதவி எண்ணை அழைத்தார். காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்தனர். கத்தியுடன் நின்றிருந்த கியெப் காவலர்களின் மிரட்டலுக்கு அஞ்சி கத்தியை கீழே போட்டதும் அவரை உடனடியாக கைது செய்தனர். அவர் கிங் கவுன்டி சிறையில் அடைக்கப்பட்டார். டிரானின் தாயாரையும் கொல்ல வீடு முழுவதும் அவரை தேடி வந்த கியெப்பின் நோக்கம், காவல்துறையினரின் வருகையால் தடைபட்டு, டிரான் தாயாரின் உயிர் காப்பாற்றப்பட்டது. நன்றாக படிக்க கூடியவரான ஏஞ்சலினா டிரான் ஒரு சமூக பொறுப்புள்ள மாணவி என்றும், பிறருக்கு உதவிகள் செய்யும் நல்லெண்ணம் கொண்டவர் என்றும் கூறும் அவரை அறிந்தவர்கள், அவருக்கு நேர்ந்த கோர முடிவு குறித்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply