• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிரீஸ் நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது

பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தென்ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்று பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பன்னாட்டு தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின், தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கிரீஸ் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்சுக்கு விமானம் மூலம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஜார்ஜ் ஜெராபெட்ரிட்டிஸ் வரவேற்றார். இதைத் தொடர்ந்து, கிரீஸ் நாட்டின் அதிபர் கேத்ரினா சகெல்லரோபவுலோ, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார். இந்நிலையில், கிரீஸ் நாட்டின் உயரிய விருதான 'கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்' விருதை பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் கேத்ரினா வழங்கி கவுரவித்தார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்த விருது கிரீஸ் நாட்டு மக்கள் இந்தியாவின் மீது வைத்துள்ள மரியாதையின் அடையாளாக இருக்கிறது. இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
 

Leave a Reply