• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் மயங்கி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

இலங்கை

யாழில்  நபர் ஒருவர் வீதியில் மயங்கி விழந்து நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். தோட்ட வேலை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய போதே குறித்த நபர் இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவர்  யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியை சேர்ந்த 37 வயதான  இராசரத்தினம் நாகேந்திரன்  எனத் தெரிய வந்துள்ளது.

இதே வேளை அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், உடற்கூற்று பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply