• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மீண்டும் பயணத்தை ஆரம்பித்தது குமுதினி

இலங்கை

யாழ். நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமாகக் கருதப்படும் குமுதினிப் படகானது மீண்டும் பயணிகள் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமுதினிப் படகானது  பழுதடைந்திருந்த  நிலையில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டு குறிகாட்டுவானில் தரித்துவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில்  நேற்றைய தினம் மாலை குறிகாட்டுவானில் இருந்து பயணிகளை ஏற்றியவாறு நெடுந்தீவு சென்று தரித்த குமுதினி, இன்றைய தினம் காலை 7 மணிக்கு நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கிப் புறப்பட்டு தனது பயணத்தை மீள ஆரம்பித்துள்ளது.

குமுதினி படகானது 1968 ஆம் ஆண்டு முதல் யாழ்.நெடுந்தீவிற்கான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply