• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மீண்டும் நெல்சனுடன் கைகோர்க்கிறாரா ரஜினிகாந்த்

சினிமா

ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ளது. எதிர்பார்த்ததை விட இப்படத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது என கூறப்படுகிறது. இதுவரை உலகளவில் ரூ. 500 கோடியை கடந்து ஜெயிலர் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. ஜெயிலர் வெளியான நிலையில் இமயமலைக்கு ரஜினி சென்று இருந்தார்.
  
நேற்று இரவு இமயமலையில் இருந்து ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். அப்போது பத்திரிகையாளர்கள் மீண்டும் நெல்சனுடன் இணைய வாய்ப்பு இருக்கிறதா என ரஜினியிடம் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், 'அதை பற்றி இனிமேல் தான் யோசிக்க வேண்டும்' என கூறினார். கண்டிப்பாக இந்த கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் என ரஜினிகாந்த் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று. 
 

Leave a Reply