• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பெரியப்பா – யாழில் சம்பவம்

இலங்கை

தனது வீட்டில் தங்கி இருந்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குறித்த சிறுமியின் பெரியப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் வறுமை காரணமாக 17 வயதான தனது மகளை, தந்தையின் அண்ணாவின் வீட்டில் பெற்றோர் தங்க வைத்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமியின் பெரிய தந்தை நீண்ட காலமாக சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார்.

இது குறித்து சிறுமி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, நேற்று பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சிறுமியின் பெரிய தந்தையை கைது செய்துள்ளதுடன், சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 

Leave a Reply