• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாக்யராஜின் டார்லிங் டார்லிங் டார்லிங்

சினிமா

பாக்யராஜின் ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது பாக்யராஜ் பூர்ணிமாயிடையே ஒரு இயக்குனர் ஒரு நடிகை என்ற உறவு மட்டுமே இருந்தது. காதல் எதுவும் இல்லை.

ஏனெனில் அப்போது பாக்யராஜின் மனைவி பிரவீனா உயிரோடு இருந்தார்.

‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படப்பிடிப்பின் போது பாக்யராஜ் வீட்டுக்கு பூர்ணிமா வருவார். அப்போது பூர்ணிமா மற்றும் பிரவீனா ஆகிய இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது. குறிப்பாக பாக்யராஜ் – பிரவீனா திருமண நாள்தான் பூர்ணிமாவின் பிறந்தநாள் என்பதை பார்த்து ரொம்ப ஆச்சரியப்பட்டார்கள்.

இந்த நிலையில்தான் திடீரென பிரவீனா உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு பாக்யராஜை ரொம்பவே வருத்தத்தில் ஆழ்த்தியது. இதனை அடுத்து அவர் மன நிம்மதிக்காக கோவாவுக்கு சென்று நிம்மதியாக இருக்க தொடங்கினார்.

பாக்யராஜின் ஒரே அண்ணன் அவரை மறுமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். ஆனால் அவருக்கு பிரவீனாவை மறக்க முடியவில்லை. இந்த நிலையில் தான் கடிவாளம் இல்லாமல் நமது வாழ்க்கை இருந்தால் ஒரு கட்டத்தில் பாதை மாறி சென்று விடும் என்று பயப்பட ஆரம்பித்தார். அதன் பிறகு அவர் மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.

இந்த நிலையில் தான் மும்பைக்கு ஒருமுறை பாக்யராஜ் சென்றிருக்கும்போது பூர்ணிமாவை சந்திக்க நேர்ந்தது. அப்போது அவருடைய எளிமை பிடித்து விட்டதால் தனது திருமண எண்ணத்தை கூறலாமா என்று முடிவு செய்தார். ஆனால் பூர்ணிமா அப்போது மறுநாள் தான் பாரிஸூக்கு ஒரு படத்தின் படப்பிடிப்புற்கு செல்வதாக கூறினார். இதனை அடுத்து பாரிஸ் சென்றதும் எனக்கு போன் செய்யுங்கள் என்று பாக்யராஜ் சொன்னார்.

இந்த நிலையில் பாரிஸில் இருந்து பலமுறை பூர்ணிமா போன் செய்த போதும் பாக்யராஜ் போன் எடுக்கவில்லை,

அவருடைய உதவியாளர் போனை எடுத்து தவறுதலாக பாரிஸ் கார்னரில் இருந்து ஒரு ரசிகை பேசுகிறார் என்று நினைத்து டைரக்டர் பிஸியாக இருக்கிறார் என்று கூறி வைத்து விட்டாராம்.

அதன் பிறகு உண்மை தெரிந்து பாக்யராஜ் அந்த உதவியாளரை திட்டியதாகவும், அதன் பின் போன் அருகிலேயே இருந்து எப்போது ஃபோன் வரும் என காத்திருந்ததாகவும் தெரிகிறது. மறுநாள் போன் வர அவர்கள் பேசியபோதுதான் தனது காதலை ப்ரபோஸ் செய்துள்ளார் பாக்யராஜ். அப்போது பூர்ணிமா தனது அம்மாவிடம் பேசுங்கள் என்று கூறினார்.

இதனையடுத்து பாக்யராஜ், பூர்ணிமாவின் அம்மாவிடம் பேச அதன்பின் பூர்ணிமாவின் அப்பா, தாத்தா அவர்கள் குடும்பத்தினர் ஒவ்வொருவரிடம் சம்மதம் பெற்று அதன் பிறகுதான் திருமணம் நடந்தது.

வள்ளியம்மை வள்ளி

Leave a Reply