• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சரக்கு ரயிலின் முன்னால் பாய்ந்து யுவதி உயிரிழப்பு

இலங்கை

கண்டியில் இருந்து பதுளை நோக்கிப்  பயணித்த சரக்கு ரயிலின் முன்னால்  பாய்ந்து 28 வயதான யுவதியொருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் டயகம பிரதேசத்தைச்  சேர்ந்த கணபதி அனுஷா தர்ஷனி  என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி ஹட்டன் நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார் எனவும், ஹட்டன் பொன்னகர் பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவரை 5 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார் எனவும் பொலிஸாரின்  ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கேயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply