• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவு நாள்

இலங்கை

39 ஆண்டுகளுக்கு முன்னர்  ஆகஸ்ட் 6, 1984 ஆம் திகதி ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற வேளை காலநிலை காரணமாக இறந்தார்.

ஒன்பது உலக சாதனைகள் படைத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றவர்.

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆனந்தன், சிறு வயதில் இருந்தே இளம்பிள்ளை வாத நோயினால் பாதிக்கப்பட்ட இவர் 1975 ஆம் ஆண்டு பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த போது அன்றைய வீரகேசரி பிரதம ஆசிரியர் ஆழிக்குமரன் என்ற பட்டத்தின் வழங்கினார்.

இவர் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்கத் திட்டமிட்டு இங்கிலாந்து சென்றார். குறுகிய பயிற்சியில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்க முற்பட்டார். 1984 ஆகஸ்ட் 6 ஆம் திகதி ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்த போது குளிரால் பாதிக்கப்பட்டு சாதனை முயற்சியின் போதே மரணத்தையும் தழுவினார். 

குளிர்ந்த கடலே கவலை தருகிறது. அதற்கேற்ப என்னை தயார் செய்ய கால அவகாசம் போதவில்லை என்று தெரிவித்தார். இதுதான் அவர் இறக்கு முன்னர் கூறிய கடைசிச் சொற்கள்.

Leave a Reply