• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நள்ளிரவில் ரஜினி வீட்டு கதவை தட்டிய சிறுமி - போயஸ்கார்டனில் பரபரப்பு

சினிமா

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள போயஸ்கார்டன் பகுதியில் நடிகர் ரஜினிகாந்த் வசித்து வருகிறார். அவரை பார்க்கும் ஆசையில் வெளியூர்களில் இருந்து பலர் சென்னை வந்து அவரது வீட்டுக்கு செல்வதுண்டு. இதுபோன்ற நபர்களை போலீசார் மீட்டு அனுப்பி வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சேலம், பெத்த நாயக்கம் பாளையம், சமுத்திரம் காலனி பகுதியில் வசித்து வரும் ராமர் என்பவரது மகளான தீபிகா என்ற ஹரினி, ரஜினியை பார்ப்பதற்காக வீட்டில் பொய் சொல்லி விட்டு சென்னைக்கு வந்துள்ளார். 15 வயது சிறுமியான அவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலையில் தனது வீட்டில் இருந்து புறப்பட்ட தீபிகா ஆசிரியர் ஒருவரை பார்த்து விட்டு வருவதாக கூறியுள்ளார்.

பின்னர் அவர் சேலத்தில் இருந்து பஸ் ஏறி சென்னை வந்தார். கோயம்பேட்டில் இருந்து போயஸ்கார்டன் பகுதிக்கு ஆட்டோவில் சென்று இறங்கிய சிறுமி தீபிகா, ரஜினிகாந்தின் வீட்டுக்கு சென்று நள்ளிரவில் கதவை தட்டினார். ரஜினிகாந்தின் வீட்டு காவலாளி கதவை திறந்து பார்த்தார். அப்போது வெளியில் சிறுமி நிற்பதை பார்த்து விசாரித்த காவலாளி இதுபற்றி தேனாம்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று மாணவி தீபிகாவை மீட்டனர். பின்னர் சிறுமியின் பெற்றோரை தொடர்பு கொண்டு விசாரித்தபோது பல்லாவரம் பம்மல் பகுதியில் பாட்டி சின்னபொன்னு வசித்து வருவது தெரியவந்தது. அவரிடம் சிறுமியை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து பாட்டி சின்ன பொன்னு தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்து தீபிகாவை அழைத்துச் சென்றார். போலீசார் அறிவுரை கூறி சிறுமியை பாட்டியுடன் அனுப்பி வைத்தனர்.
 

Leave a Reply