• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மலையக கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்குமான சந்திப்பு ஒத்திவைப்பு

இலங்கை

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பு எதிர்வரும் 11 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியினால் ‘மலையகம் 200’ எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் 12 ஆம் திகதி நுவரெலியாவில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக் காரணமாத்தினாலும் எதிர்வரும் 10 ஆம் திகதி, பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ளமுழுநாள் விவாதம் காரணமாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பில் ஏனைய மலையத் தலைவர்களுடன் கலந்தாலோசனையின் பின்னர் அறிவிப்பதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply