• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கடலில் குப்பைகளை கொட்டியவர் கைது

இலங்கை

பேருவளை, மருதானை மீன்பிடி துறைமுகத்தை அடுத்துள்ள கலங்கரை விளக்கத்திற்கு சற்று தொலைவில் கடலில் கழிவுகளை கொட்டிய அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை பேருவளை மீன்பிடி பரிசோதக அதிகாரிகள் குழுவினர் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.;.

இந்த நபர் அப்பகுதியில் பழைய பொருட்களை சேகரிப்பவர் என்றும், பணத்திற்கு பயன்படும் பொருட்களை மட்டுமே சேகரித்து விற்பனை செய்வதாகவும், மீதமுள்ள குப்பைகளை இரவு மற்றும் பகலில் அதிக அளவில் கடலில் கொட்டுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் , கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனினும் குறித்த நபர் அவ்வப்போது குப்பைகளை அகற்றும் சம்பவங்களை அவதானித்த பேருவளை அதிகாரிகள் குழு பொலிஸாரின் ஆதரவுடன் சந்தேக நபரை நேற்று (07) கைது செய்துள்ளனர்.

அதனையடுத்து, அவரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் பரிசோதகரின் பிரதான அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றதாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply