இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சச்சின் டெண்டுல்கர்
இலங்கை
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுனிசெவ் அமைப்பின் கௌரவ தூதுவராகவும் செயற்படும் சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் சப்பிரகமுவ மாகாணத்தில் உள்ள பாடசாலையொன்றிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆளுநர் நவீன் திசநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக சிறுவர்களிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பிலான நிகழ்வில் சச்சின் கலந்துகொள்ளவுள்ளார்.