• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் 54 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது - இருவர் தப்பியோட்டம்

இலங்கை

யாழில் 54கிலோ 300 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் தப்பியோடியள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை  கடற்படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை   முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியை சேர்ந்த 26 வயதான  இளைஞர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த நபரிடம்  விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், தப்பி சென்ற இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply