• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மின்சாரக் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்கப்பது குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கை

மின்சாரக் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்கப் போவதில்லை என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டணத்தை அரசாங்கம் உயர்த்தவுள்ளதாக பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த ஆண்டில் மின்கட்டணத்தை மீண்டும் உயர்த்தப் போவதில்லை என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மாத்திரம் மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதே அரசாங்கத்தின் தீர்மானம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திட்டமிட்டபடி தடையின்றி மின் விநியோகத்தினை மேற்கொள்வதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மின்சாரசபையானது நீர்ப்பாசன திணைக்களத்துடன் நேற்று சந்திப்பொன்றில் ஈடுபட்டிருந்தது.

இதன்போது தடையின்றி மின் விநியோகத்தை அமுல்படுத்துவது மற்றும் விவசாயத்திற்குத் தேவையான அதிகபட்ச நீரை உறுதி செய்வது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தின்போது கவனம் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply