• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கோரிகைக்கு ஜனாதிபதி இணக்கம்

இலங்கை

அனைத்து மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒரே தடவையில் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே இதற்கான இணக்கப்பாட்டை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்திய அரசு வழங்குவதற்கு முன்வந்துள்ள 3,000 மில்லியன் ரூபாவை எந்தெந்த திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் தொடர்பான யோசனைகள் என்ன என்பன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதில் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply