• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதற்கு ஈரானிய ஜனாதிபதி இணக்கம்

இலங்கை

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதற்கு ஈரானிய ஜனாதிபதி Ebrahim Raisi இணக்கம் தெரிவித்துள்ளார்.

வெளிவிகார அமைச்சர் அலிசப்ரியுடனான சந்திப்பின் போதே அவர் இந்த விடத்தை தெரிவித்துள்ளார்

அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையே சீராக வளர்ந்து வரும் உறவுகளைப் பாராட்டியுள்ளதுடன் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் ஜனாதிபதி Ebrahim Raisi அழைப்பு விடுத்துள்ளார்.

ஈரானிய நிறுவனங்கள் இலங்கையில் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும், பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் மருத்துவத் துறைகளில் இஸ்லாமிய குடியரசுடனான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த வெளிவிகார அமைச்சர் அலிசப்ரி விருப்பம் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply