• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தனியார் நிறுவனமொன்றில் இடம்பெற்ற விபத்தில் ஏழு இந்தியர்கள் காயம்

இலங்கை

கஸ்பேவ-தியகம வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றில் இடம்பெற்ற விபத்தில் ஏழு இந்தியர்கள் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தானது இரும்பு உருக்கும் கொதிகலனில் இருந்து எரிந்து கொண்டிருந்த இரும்புத் துண்டுகள் வெளியே வீசப்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கஸ்பேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது 

Leave a Reply