• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டைரக்டர் எங்ககிட்ட வாங்கிய பணத்த கூட திருப்பித்தரல - குமுறும் பொம்மன் பெள்ளி தம்பதி

சினிமா

படப்பிடிப்பின் போது தங்களிடம் வாங்கிய பணத்தை கூட "the elephant whisperers" படத்தின் இயக்குனர் திருப்பி தரவில்லை என பொம்மன் பெள்ளி தம்பதி தெரிவித்துள்ளனர்.

முதுமலை காட்டில் வசித்து வரும் பொம்மன் பெள்ளி தம்பதிகளின் வாழக்கையை மையமாக கொண்டு "the elephnat whisperers" என்ற documentary short film இந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்கார் விருதை வென்றிருந்தது. இதனால் காரணாமாக பொம்மன் பெள்ளி தம்பதிகள் மிகவும் பிரபலமடைந்தனர்.

தொடர் மீடியா வெளிச்சத்தில் இருந்து வந்த இவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தங்களுக்கு படக்குழு எந்தவித பொருளாதார உதவியும் செய்திடவில்லை என தெரிவித்திருந்தனர்.

அந்த பேட்டியில் இயக்குநர் நாங்கள் படத்தில் நடிக்க பணம் தரவில்லை. திருமண காட்சியை படமாக்க தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார். எனவே, எங்கள் பேத்தியின் கணக்கில் இருந்து பணத்தை எடுத்து சூட்டிங் செலவுக்குக் கொடுத்தோம் என தெரிவித்தார்கள்.

மேலும், அந்த பணத்தை கூட இயக்குநர் இன்னும் திருப்பி தரவில்லை என கூறி, பணத்தைத் திருப்பிக் கொடுத்ததாகவும், எங்களுக்கு கார் மற்றும் நிலம் வாங்கித் தந்ததாகவும் அவர் கூறுவது அனைத்தும் பொய்" என்று தெரிவித்திருக்கிறார்கள்
 

Leave a Reply