• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரான்ஸ் பொலிஸாரால் 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் பொலிஸாரால் துரத்தப்பட்ட போது ஸ்கூட்டரில் வேகமாக சென்ற 16 வயது சிறுவன் மற்றும் அவரது சக பயணி என இருவர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர். பிரான்ஸில் ஞாயிற்றுக்கிழமை ஸ்கூட்டரில் சென்ற 16 வயது டீன் ஏஜ் சிறுவன் மற்றும் அவரது வயது வந்த சக பயணி பொலிஸாரால் துரத்தப்பட்ட பிறகு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
  
ஸ்கூட்டரில் சென்ற ஜோடி பொலிஸின் ரோந்தில் இருந்து தப்பிய போது மற்றொரு கார் மீது மோதி உயிரிழந்து இருப்பதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் மேற்கு பிரான்ஸின் லிமோஜஸில்(Limoges) இருந்து ஸ்கூட்டரை பொலிஸார் துரத்துவதற்கு முன்பு, அப்பகுதிக்கு வந்த சம்பந்தப்பட்ட ஸ்கூட்டரை தடுத்து நிறுத்த பொலிஸார் தயாராகி கொண்டிருந்தும் அவர்கள் தப்பிச் சென்று உள்ளனர் என பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின் பொலிஸாரின் துரத்தலுக்கு பிடி கொடுக்காமல் தப்பிச் சென்ற ஸ்கூட்டர் போக்குவரத்து சிக்னலின் சிவப்பு ஒளியை பொருட்படுத்தாமல் சாலையில் பாய்ந்துள்ளது, அப்போது அங்கிருந்த கார் மீது மோதி ஸ்கூட்டர் விபத்துக்குள்ளானதில் 16 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான் மற்றும் வயது வந்த சக பயணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர்கள் சக்திவாய்ந்த Yamaha TMAX ஸ்கூட்டரில் சென்றதாகவும், சூழ்நிலையின் ஆபத்தை கருதி விரைவாக அவர்களை மடக்கி பிடித்து துரத்தலை முடிக்க நினைத்ததாகவும் பொலிஸ் வட்டாரங்கள் கூறுகிறது.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்கள் மேல் எங்கள் எண்ணங்கள் உள்ளது என்று லிமோஜஸஸ் மேயர் எமிலி ரோஜர் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூன் 17ம் திகதி தான் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 வயது சிறுவன் நஹெல் கொல்லப்பட்டான். இதனால் பிரான்ஸ் முழுவதும் கலவரம் வெடித்தது.

இந்நிலையில் தற்போதைய சம்பவம் நடைபெற்ற நகரத்தில் விபத்துக்கு பிறகு சிறிது நேரத்திற்கு சச்சரவுகள் எழுந்தது, ஆனால் அவை தணிந்து அமைதியடைந்து இருப்பதாக Actu17 செய்தி தளம் தெரிவித்துள்ளது. 
 

Leave a Reply