• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேசிய கீத விவகாரம்-பாடகி உமாரா சிங்கவன்சவிடம் வாக்குமூலம்

இலங்கை

தேசிய கீதத்தை திரிபுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாடகி உமாரா சிங்கவன்ச, வாக்குமூலம் பெறுவதற்காக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

உமாரா சிங்கவன்சவை இன்று அமைச்சில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உமாராவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன,பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோகவுக்கு அறிவித்திருந்தார்.

இதன்படி, அமைச்சின் விசாரணை பிரிவின் செயலாளர் விடுத்துள்ள அறிவித்தலுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக கிரிக்கெட் நிர்வாக சபையிடமும் விசாரணை அதிகாரிகள், வாக்குமூலம் பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது 

Leave a Reply